பொது மக்களின் உதவியை நாடும் பொலிசார்!
அம்பாறை – இகினியாகல பிரதேசத்தில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கைதுசெய்ய பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். பொலிஸார் வெளியிட்ட புகைப்படம் இதன்படி, 47 வயதுடைய சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதுடன், சந்தேகநபரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், சந்தேகநபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0632242022 என்ற இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு தகவல் வழங்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed